ஆப்நகரம்

Durai Murugan: அரசியல் பரபரப்பு; கே.சி.ஆரைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த துரைமுருகன்!

ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்ததை அடுத்து, சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சந்தித்துள்ளார்.

Samayam Tamil 14 May 2019, 4:19 pm
நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து வரும் மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் தலைமையிலான இரு பெரும் அணிகள் உள்ளன.
Samayam Tamil Durai Murugan CBN


இதற்கிடையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவும் ஒருவர். இவர் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

இது மூன்றாவது அணியில் திமுகவை இடம்பெறச் செய்யும் முயற்சி என்று கருதப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மூன்றாவது அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் வரவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. 3வது அணி அமைவது குறித்து மே 23க்கு பின் தெரியவரும் என்றார்.

இந்த சூழலில் ஆந்திர மாநிலம் அமராவதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்துள்ளார். அப்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த துரைமுருகன், இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சந்தித்தது பரபரப்பான அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி