ஆப்நகரம்

Exit Poll Results: எக்ஸிட் போலை நம்பாதீங்க; எக்ஸாட் போலை நம்புங்கள் - வெங்கையா நாயுடு!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பாதீர்கள் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 May 2019, 9:16 am
நாடு முழுவதும் நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிவந்தன.
Samayam Tamil Venkaiah Naidu


அதில், பாஜக கூட்டணி பெருவாரியான இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் அதிகபட்சமாக 365 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்த இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. இதன்மூலம் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எக்ஸிட் போலை நம்பாதீர்கள். எக்ஸாட் போலை நம்புங்கள் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இம்முறை தேர்தலில் எனது பங்களிப்பு இல்லை. இதற்கு முன்பு தேர்தல்களில் 16 இடங்களில் தேர்தல் கூட்டங்களில் பேசுவேன். ஆனால் தற்போது அவ்வாறு செய்ய முடியாது.

ஏனெனில் நான் மதிக்கத்தக்க பதவியில் இருக்கிறேன். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பாதீர்கள். உண்மையாக நடைபெற்ற தேர்தலை நம்புங்கள். மக்களின் தீர்ப்பை வரும் 23ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

சாதி, மதம் பார்த்து தேர்தலில் சீட் வழங்குவது, தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவிடுவது போன்றவை ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார்.

அடுத்த செய்தி