ஆப்நகரம்

21 சட்டமன்ற இடைத்தேர்தல் எப்போது? இன்று மாலை அறிவிப்பு - எகிறிய எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 10 Mar 2019, 3:25 pm
முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, அதிமுகவில் இருந்து 18 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரன் மீது சென்றனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Samayam Tamil ECI


இதையடுத்து திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் மறைவால், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாகின. இதையடுத்து ஒசூர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழக்கு ஒன்றில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் அவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.

இந்த சூழலில் இன்று மாலை நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தலும் நடக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி