ஆப்நகரம்

கருத்துக்கணிப்பு பதிவுகளை உடனே நீக்கவும் - டுவிட்டருக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை!

டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகளை நீக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 16 May 2019, 8:11 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Samayam Tamil Twitter EC


இந்த சூழலில் பயனாளர் ஒருவர், தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பான கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து புகார் எழுந்தவுடன், அவர் உடனே தனது பதிவை நீக்கிவிட்டார்.

அதேசமயம் மூன்று ஊடகங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்தியச் சட்டப்பிரிவு 126ஏ படி, தேர்தல் முடியும் வரை எந்தவொரு ஊடகங்களிலும் கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் முடிந்து, அடுத்த அரை மணி நேரத்திற்கு பின்பே கருத்துகளை வெளியிடலாம்.

இந்த விதிமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, அபராதமோ அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையோ விதிக்கப்படும்.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான பதிவுகளை நீக்க, டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அடுத்த செய்தி