ஆப்நகரம்

தமிழகத்தில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் புதிய தகவல்

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 19 Apr 2019, 7:30 pm
தமிழகத்தில் நேற்று மக்களவை, 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் குறித்து நிலவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மதியம் 1.15 மணியளவில் அறிவித்தார்.
Samayam Tamil தமிழகத்தில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் புதிய தகவல்
தமிழகத்தில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் புதிய தகவல்


அதன்படி, நேற்று நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், ஒட்டுமொத்தமாக 71.87 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 சதவிகிதமும், குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 56.41 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 75.57 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக சோளிங்கா் தொகுதியில் 82.26 சதவிகிதமும், குறைந்தபட்சமாக பெரம்பூரில் 64.14 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளதாக சத்யபிரதா சாஹூ கூறினார்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பதிவான வாக்குகளை குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட உத்தரவுக்கு மாறாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 71.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தருமபுரியில் 80.49 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.34 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தமிழகத்தில் இடைத்தேர்தலில் 75.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதில் அதிகப்பட்சமாக சோளிங்கரில் 82.26 சதவீதமும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 64.14 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, மக்களவைத் தேர்தலில் மொத்தம் 4.20 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல, வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 1.64 கோடி பேர் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி