ஆப்நகரம்

தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க மதுமகாஜன் நியமனம்

மக்களவைத் தோ்தல், 18 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்திற்கு சிறப்பு செலவின பாா்வையாளராக மதுமகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Samayam Tamil 19 Mar 2019, 10:43 pm
மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கான தோ்தல் செலவின பாா்வையாளராக மதுமகாஜனை இந்திய தே்ாதல் ஆணையம் நியமித்துள்ளது.
Samayam Tamil Election Commission of India


மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பொதுமக்கள் உரிய ஆவணம் இன்றி பணம், நகை உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உாிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்திற்கான தோ்தல் செலவின பாா்வையாளராக மதுமகாஜனை இந்திய தோ்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவா் தோ்தல் தொடா்பான செலவினங்களை பாா்வையிடுவாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதையும் தடுக்கும் நோக்கில் இவா் நியமனம் செய்யப்பட்டள்ளாா்.

அடுத்த செய்தி