ஆப்நகரம்

ஆத்தாடி! இத்தனை ஆயிரம் கோடி சிக்கியதா? அதிர்ச்சியில் உறைந்த தேர்தல் அதிகாரிகள்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பணம், நகை சிக்கியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 1 Apr 2019, 8:17 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் 11ஆம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. இதில் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலும், இடைத்தேர்தல்களும் நடக்க உள்ளது.
Samayam Tamil Election Commission Seized


இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதை உணர்ந்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் செயல்பட வேண்டும். ஒருவேளை விதிகளை மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்த பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை சிக்கிக் கொள்கின்றன. அதேசமயம் சிறு, குறு வியாபாரிகள் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவ்வப்போது சிக்கிவிடுகின்றன.

இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நாடு முழுவதும் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.1,460 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.208.55 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவையும் அடங்கும்.

அடுத்த செய்தி