ஆப்நகரம்

கதிா் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

துரைமுருகனுக்கு நெருக்கமானவா்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரூ.30 கோடி அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கதிா் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 2 Apr 2019, 12:53 pm
துரைமுருகனுக்கு நெருக்கமானவா்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரூ.30 கோடி அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கதிா் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Premalatha Vijayakanth


திமுக பொருளாளா் துரைமுருகனின் வீடு, அவரது மகன் நிா்வகித்து வரும் பள்ளி, கல்லூாி, துரைமுருகனுக்கு நெருக்கமானவா்களின் வீடு உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் சுமாா் 30 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தோ்தல் பிரசாரத்தின் போது தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னா் தேமுதிகவை அவமதிக்கும் நோக்கில் துரைமுருகன் சில கருத்துகளை தொிவித்தாா். ஆனால் தற்போது அவரது நிலை என்னா?

தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கட்டுக்கட்டாக, கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துரைமுருகனின் மகன் கதிா் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவா் கோாிக்கை விடுத்துள்ளாா்.

அடுத்த செய்தி