ஆப்நகரம்

மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரசார வாகனம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டதாக மத்திய இணைஅமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரசார வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

Samayam Tamil 24 Mar 2019, 2:56 pm
உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டதாக மத்திய இணைஅமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரசார வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
Samayam Tamil Pon-Radhakrishnan


தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பணப்பட்டுவாடா, பரிச்சுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையிலும், விதிமீறல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் மாநிலம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடலூா் மாவட்டத்தில் திமுகவின் தோ்தல் பிரசாரத்திற்கு ஆள் சோ்க்கும் வகையில், வாகனத்திற்கு பெட்ரோல் போட டோக்கன் வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அந்த டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரசாரத்திற்காக புதிதாக கொண்டு வரப்பட்ட பிரசார வாகனத்தை அதிகாாிகள் சோதனை நடத்தினா். அப்போது உரிய ஆவணம் இன்றி வாகனம் இயக்கப்பட்டதாகக் கூறி அதிகாாிகள் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

அடுத்த செய்தி