ஆப்நகரம்

அரூரில் அரசு பேருந்தில் சிக்கிய ரூ.3.47 கோடி பணம் - தேர்தல் பறக்கும் படை அதிர்ச்சி!

தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், பேருந்தில் இருந்து பல கோடி ரூபாய் பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Apr 2019, 9:40 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
Samayam Tamil Dharmapuri Amount Seized


பல்வேறு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இவற்றை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியால் ஏராளமான பணம், நகைகள், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.1,582 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.270.15 கோடி மதிப்பில் பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து, தருமபுரி மாவட்டம் அரூருக்கு இன்று வந்து சேர்ந்தது. அதில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 7 பைகளில் இருந்து ரூ.3.47 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கைப்பற்றிய அதிகாரிகள், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி