ஆப்நகரம்

இத்தனை கோடியா - அத்தனையும் தங்க நகைகளாம்; அப்படியே அள்ளிச் சென்ற தேர்தல் அதிகாரிகள்!

பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

Samayam Tamil 31 Mar 2019, 10:23 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
Samayam Tamil EC Jewels


இதையொட்டி அரசியல் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி, எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் ரூ.70 கோடியே 90 லட்சம் பணம், கடந்த 20 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். இந்நிலையில் விருதுநகர் அருகே சிவகாசி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, எடுத்துச் செல்லப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி