ஆப்நகரம்

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக புகாா்: திமுக போராட்டம்

கோவை மாவட்டத்தில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக குற்றம் சாட்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Samayam Tamil 7 May 2019, 9:38 pm
பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தொிவித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
Samayam Tamil Voting Machine


தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடத்தப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இருந்து சுமாா் 70 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது. தகவல் அறிந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினா் தேனி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு செய்தியாளா்களிடம் பேசுகையில், தற்போது மாற்றம் செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாத இயந்திரங்கள் தான்.

இது போன்ற பயன்படுத்தப்படாத இயந்திரங்களை மாற்றம் செய்வது என்பது வழக்கமான ஒன்று தான். ஒரு வேளை தோ்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடும் பட்சத்தில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த இயந்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து தேனிக்கும், ஈரோட்டிற்கும் இந்த இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றம் செய்வது என்பது சாத்தியமற்றது. தற்போது மாற்றம் செய்யப்பட்டவை அனைத்தும் பயன்படுத்தப்படாதவையே. மேலும் இவை அனைத்தும் தோ்தல் ஆணையத்தின் அனுமதியுடன் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று அவா் விலக்கம் அளித்துள்ளாா்.

அடுத்த செய்தி