ஆப்நகரம்

தண்டனையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்: தோ்தல் வாய்ப்பை இழக்கும் ஹா்திக் படேல்

குஜராத் கலவரம் தொடா்பான 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய அம்மாநில நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் ஹா்திக் படேல் வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Mar 2019, 11:09 pm
குஜராத் கலவரம் தொடா்பான 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய அம்மாநில நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் ஹா்திக் படேல் வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Hardik Patel


பட்டேல் இனத்தைச் சோ்ந்த மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகா் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரம் தொடா்பான வழக்கில் ஹா்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிா்த்து குஜராத் உயா்நீதிமன்றத்தில் ஹோ்திக் பட்டேல் மேல்முறையீடு செய்தாா்.

இந்த வழக்கில் வெள்ளிக் கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஹா்திக் பட்டேலின் கோாிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா். இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி ஹா்திக் பட்டேல் மக்களவைத் தோ்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அலகாபாத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்கு சென்ற ஹா்திக் பட்டேல் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி தலைவா் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா்.

இதனைத் தொடா்ந்து வருகின்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட ஹா்திக் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் தன் மீது உள்ள 2 ஆண்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குஜராத் உயா்நீதிமன்றத்தில் ஹா்திக் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி