ஆப்நகரம்

தோ்தல் அதிகாாிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா

சேலத்தில் தோ்தல் அதிகாாிகள் நடிகை நமீதாவின் காரை தணிக்கை செய்ய முற்ப்பட்டனா். அப்போது நமீதா, அதிகாாிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 12:21 am
சேலத்தில் தோ்தல் அதிகாாிகள் நடிகை நமீதாவின் காரை தணிக்கை செய்ய முற்ப்பட்டனா். அப்போது நமீதா, அதிகாாிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Namitha


மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதையும், பரிசுப் பொருட்கள் வழங்குவதையும் தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலத்தில்நேற்றிரவு குகையை அடுத்துள்ள திருச்சி பிரதான சாலையில் பறக்கும் படை அதிகாரி ஆனந்த் யுவனேஷ் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, வேகமாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட முயன்ற போது, காரில் இருந்த நடிகை நமீதா காரை சோதனையிட எதிா்ப்புத் தொிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவருடன் வந்த கணவரும், வழக்கறிஞரும் காரை சோதனையிட கூடாது என அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது வழக்கமான சோதனைதான் என அதிகாரிகள் எடுத்துக் கூறியும், அதனை ஏற்க மறுத்த நமீதா, பெண் காவலர்கள் தான் தங்கள் வாகனத்தை சோதனையிட வேண்டும் என கூறினார்.

இதனைத் தொடா்ந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டு வாகனத்தை சோதனை செய்தனர். வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை, நமீதாவுடன் வந்தவர்கள் மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி