ஆப்நகரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: வாக்காளர்கள் தவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய மற்றும் கடற்கரைக் கிராம பகுதிகளில் பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்துள்ளனர்.

Samayam Tamil 18 Apr 2019, 12:54 pm
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய மற்றும் கடற்கரைக் கிராம பகுதிகளில் பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்துள்ளனர்.
Samayam Tamil voting machine


கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால், வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்துள்ளனர். பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டார் செருப்பாலூர் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடற்கரைக் கிராமங்களான தூத்தூர், பூத்துறை, பள்ளிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது.

இதனால் வாக்காளர்கள் வாக்கு பதிவுச் செய்ய முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்று தவித்து வருகின்றனர். இயந்திரங்கள் பழுதான மையங்களில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி