ஆப்நகரம்

சேலத்தில் அரசு ஒப்பந்த பணியாளரிடமிருந்து ரூ.57 லட்சம் பணம் பறிமுதல்!

சேலத்தில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அரசு ஒப்பந்த பணியாளர் எடுத்து வந்த 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்த பறிமுதல் செய்து வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Samayam Tamil 30 Mar 2019, 1:22 pm
சேலத்தில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அரசு ஒப்பந்த பணியாளர் எடுத்து வந்த 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்த பறிமுதல் செய்து வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Samayam Tamil Salem


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி என்ற பகுதியில்சங்கர் கணேஷ் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது கரூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் அரசு சாலைகள் மற்றும் மேம்பால ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் விழுப்புரத்திலிருந்து தருமபுரிக்கு வந்தபோது அவரது காரை நிறுத்தி சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது ரமேஷ் 57 லட்சத்து 50 ரூபாய் பணம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்ந்து மாநகராட்சி ஆணையரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பணம் பத்து லட்சத்திற்கு மேல் ஏறி உள்ளதால் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ரமேஷிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். பின்னர் பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்த செய்தி