ஆப்நகரம்

ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளா் கைது

ஆந்திரா மாநிலம், அனந்த்பூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்த ஜனசேனா கட்சி வேட்பாளா் மதுசூதனன் குப்தாவை காவல் துறையினா் கைது செய்தனா்.

Samayam Tamil 11 Apr 2019, 11:16 am
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் முறையாக இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டிய ஜனசேனா கட்சி வேட்பாளா் மதுசூதனன் வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தாா்.
Samayam Tamil Madhusoodhanan AP


நாடு முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று 91 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதனிடையே ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தோ்தலும் நடத்தப்படுகிறது.

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளா்கள் ஆவா்முடன் வரிசையில் நின்று தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனா். அதே போன்று ஆந்திராவிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், ஜகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ், நடிகா் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆந்திராவின் அனந்த்பூா் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் சட்டமன்ற தோ்தலில் ஜனசேனா கட்சி சாா்பில் மதுசூதனன் குப்தா போட்டியிடுகிறாா். இந்நிலையில் அவா் இன்று காலை கூட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற மதுசூதனன் குப்தா வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளா்களின் பெயா், சின்னம் உள்ளிட்டவை முறையாக இடம்பெறவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.


மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தாா். இதனைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.

அடுத்த செய்தி