ஆப்நகரம்

ஆளைப் பார்க்க வந்த கூட்டம் இல்லை; மாற்றம் விரும்பி வந்த கூட்டம் - கமல் ஹாசன்!

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் கமல் ஹாசன், மக்கள் அளிக்கும் வரவேற்பு குறித்து விளக்கம் அளித்தார்.

Samayam Tamil 9 Apr 2019, 5:13 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நம் பிள்ளைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நகரமாக பொள்ளாச்சியை மாற்றி இருக்கிறார்கள்.
Samayam Tamil kamal haasan explains why people are interested in makkal needhi maiam
ஆளைப் பார்க்க வந்த கூட்டம் இல்லை; மாற்றம் விரும்பி வந்த கூட்டம் - கமல் ஹாசன்!


இந்த தவறுக்கு மெத்தனம் காரணம். இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஒருமுறையாவது முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவித்திருக்கிறாரா? இதெல்லாம் பெருசு படுத்தாதீங்க என்கிறார்.

இதுபோன்று நெருக்கமாக வந்து பேசும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள். இனி காவல்துறை உதவியுடன் தான் உங்களிடம் தான் வருகிறார்கள். வேறு யாரோ ஒருவர் சம்பாதித்த சொத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது எம்.ஜி.ஆர் சேர்த்த சொத்து.

அவர் எனக்கு நண்பர். என்னைப் பார்த்து நடிகனைப் பார்க்க வந்த கூட்டம் இது. ஓட்டாக எல்லாம் மாறாது. நான் சொல்கிறேன். இது மாற்றத்தை விரும்பி கூடிய கூட்டம். ஆளைப் பார்க்க வந்த கூட்டம் அல்ல. செயலைப் பார்த்து வந்த கூட்டம்.

இந்த தொகுதியின் வேட்பாளர் மூகாம்பிகை. பெண்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர். உங்களுக்காக டெல்லி வரை சென்று குரல் கொடுப்பார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், உங்கள் வேட்பாளர் ராஜினாமா கடிதம் கொடுத்துவிடுவார். அதனுடன் தான் வாக்கு சேகரிக்க வந்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு நல்ல எதிர்காலம் அமைய ‘டார்ச் லைட்’ சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

அடுத்த செய்தி