மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையி ல், தமிழகத்தில் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றே காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாக மக்களை சந்திப்பது மட்டுமில்லாமல், சமூகவலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் அரசியல் தலைவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக, நாட்டு நடப்பு குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால்பதித்தார்.
அவருடைய கட்சியும், நடப்பு மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ட்விட்டரில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பிரதமர் உட்பட தேசிய தலைவர்கள் உரையை பார்க்கிறார் கமல்ஹாசன். அவர் கையில் ரிமோட் மட்டும் உள்ளது. பார்க்கும் நமக்கு தலைவர்கள் பேசுவது மட்டும் கேட்கிறது.
பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா-வின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோ அதில் வரும் போது, அவர் ’ஆண்டி-இந்தியன்’ என்று சொல்லும் குரல் கேட்கிறது. அதற்கு பிறகு ஆவேசமடையும் கமல் ரிமோட்டை தூக்கி தொலைக்காட்சி மீது வீசுகிறார். திரை உடையும் சத்தம் கேட்கிறது.
பிறகு, கேமரா மூலம் மக்களிடம் பேசும் கமல், பெற்றோர்கள் வழிகாட்டுதலின் பேரில் புதிய வாக்காளர்கள் ஓட்டுபோடலாம். ஆனால் உங்கள் பெற்றோரின் சொல்பேச்சை கேட்காமல், நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் பெற்றோர் சொல் பேச்சை கேளுங்கள். நல்ல அரசை தேர்வு செய்து வாக்களியுங்கள் என்று கூறுகிறார்.
கமலின் இந்த புதிய ஆவேச பிரசார வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவுக்கு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். சினிமாவில் நடிப்பது போன்று அரசியல் களத்திலும் நன்றாகவே நடிக்கிறார் கமல்ஹாசன் என்பது போன்ற கமெண்டுகளையும் பார்க்க முடிகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாக மக்களை சந்திப்பது மட்டுமில்லாமல், சமூகவலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் அரசியல் தலைவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக, நாட்டு நடப்பு குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கால்பதித்தார்.
அவருடைய கட்சியும், நடப்பு மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ட்விட்டரில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பிரதமர் உட்பட தேசிய தலைவர்கள் உரையை பார்க்கிறார் கமல்ஹாசன். அவர் கையில் ரிமோட் மட்டும் உள்ளது. பார்க்கும் நமக்கு தலைவர்கள் பேசுவது மட்டும் கேட்கிறது.
பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா-வின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோ அதில் வரும் போது, அவர் ’ஆண்டி-இந்தியன்’ என்று சொல்லும் குரல் கேட்கிறது. அதற்கு பிறகு ஆவேசமடையும் கமல் ரிமோட்டை தூக்கி தொலைக்காட்சி மீது வீசுகிறார். திரை உடையும் சத்தம் கேட்கிறது.
பிறகு, கேமரா மூலம் மக்களிடம் பேசும் கமல், பெற்றோர்கள் வழிகாட்டுதலின் பேரில் புதிய வாக்காளர்கள் ஓட்டுபோடலாம். ஆனால் உங்கள் பெற்றோரின் சொல்பேச்சை கேட்காமல், நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் பெற்றோர் சொல் பேச்சை கேளுங்கள். நல்ல அரசை தேர்வு செய்து வாக்களியுங்கள் என்று கூறுகிறார்.
கமலின் இந்த புதிய ஆவேச பிரசார வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவுக்கு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். சினிமாவில் நடிப்பது போன்று அரசியல் களத்திலும் நன்றாகவே நடிக்கிறார் கமல்ஹாசன் என்பது போன்ற கமெண்டுகளையும் பார்க்க முடிகிறது.