ஆப்நகரம்

பெரியளவிலான வாக்குப்பெட்டியை சுமந்து சென்று அசத்திய பெண் ஆட்சியர்

கேரளா: திருச்சூர் மாவட்டத்தில் வாக்கு பெட்டியை தனி ஆளாக தூக்கிச் சென்ற காவலருக்கு, அம்மாவட்ட ஆட்சியர் கை கொடுத்து உதவியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 22 Apr 2019, 7:18 pm
வாக்குப்பெட்டியை சுமந்து செல்ல சிரமப்பட்ட காவலர்களுக்கு உதவிய பெண் ஆட்சியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் வாக்குச்சாவடி பராமரிப்பு பணியிலும் ஈடுப்பட்டார்.
Samayam Tamil கேரளா பெண் ஆட்சியருக்கு குவியும் பாராட்டுக்கள்
கேரளா பெண் ஆட்சியருக்கு குவியும் பாராட்டுக்கள்


கேரளாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்குப்பெட்டிகள் அம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து சேர்ந்தன. அப்போது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வாக்குமையத்திற்கு அதிகாரிகள் இயந்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்தனர்.

காவலர்க, அதிகாரிகள் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பூத்தில் பாதுகாப்புடன் இறக்கி வைத்து கொண்டிருந்தார்கள். இதற்காக நடைபெற்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் அனுபமா அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தார்.

அப்போது லாரியிலிருந்து இறக்கப்பட்ட பெரியளவிலான வாக்குப்பெட்டியை பூத்துக்குள் தனி ஆணாக கொண்டு செல்ல ஒரு காவலர் மிகவும் சிரமப்பட்டார். இதை கவனித்த ஆட்சியர் அனுபமா உடனே கை கொடுத்து அந்த போலீஸ்காரருக்கு உதவ முயன்றார்.

தொடர்ந்து இருவரும் பெட்டியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர். ஆனால் ஆட்சியர் இப்படி பெட்டியை தூக்கி உதவி செய்வதை பார்த்த அதிகாரிகள் பதிறிப் போயினர். அவர்கள் ஓடிவந்து பெட்டியை அவரிடமிருந்து வாங்க முயன்றனர்.

ஆனால் அதற்கு ஆட்சியர் அனுபமா மறுப்பு தெரிவித்து, பெட்டியை காவலருடன் இணைந்து அவராகவே உள்ளே தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி