ஆப்நகரம்

பிரேமலதா விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த பலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை மீண்டும் தயார் செய்தார் பிரேமலதா விஜயகாந்த். இல்லத்தரசியாக மட்டுமே இல்லாமல், கல்லூரி நிர்வாகம், ரசிகர் மன்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை பார்த்துக்கொண்டார்.

Samayam Tamil 9 Apr 2019, 12:47 pm
ஒரு பிரபல நடிகர் நடிகர் சங்கத் தலைவராகி, அரசியல் கட்சி துவங்கி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக் கடந்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் பயணத்தில், கணவரின் ஏணிக்கு தன் அன்பையும் படிக்கட்டுகள் ஆக்கி வழிநடத்தும் பெண்மணி பிரேமலதா விஜயகாந்த்.
Samayam Tamil Premalatha-Vijayakanth-Images-6


வடஆற்காடு மாவட்டத்தில் எளிமையான குடும்பம். அப்பா சுகர் ஃபேக்டரியில மேனேஜர். ஒரு அக்கா, ஒரு தம்பி. பி.ஏ ஆங்கில இலக்கிய பட்டதாரி பிரமலதா. பிரேமலதா, அவரது மூத்த சகோதரி, தம்பி சுதீஷ் அனைவரும் நேஷனல் லெவல் அத்லெட்ஸ். ஐ.பி.எஸ் கனவும் இருந்தது பிரேமலதாவுக்கு. 38 வயதான உச்ச நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் தன்னை மணக்க இருந்த மகிழ்ச்சியில் ஐபிஎஸ் கனவை துறந்தார் பிரேமலதா.

இவர்களது திருமணத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் கருணாநிதி முன் நின்று நடத்தி வைத்தார். பின் நாட்களில் அவரையும் திமுகவையும் கடுமையாக விமர்சிப்போம் என அப்போது பிரேமலதா நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்.

இல்லத்தரசியாக மட்டுமே இல்லாமல், கல்லூரி நிர்வாகம், ரசிகர் மன்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை பார்த்துக்கொண்டார்.

பாமக, திமுகவின் அத்தூமீறல்களால் தூண்டப்பட்டு 2005ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார் விஜயகாந்த். பிரேமலதா பொருளாளர் பதவி ஏற்றார். பின் நாட்களின் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி அவர்களது எதிர்கட்சி அந்தஸ்தை தட்டிப் பறிப்பார் என திமுக தரப்பு நினைத்திருக்காது. விமர்சித்த ஜெயலலிதாவுடனேயே கூட்டணி வைத்த்து 2011 தேர்தலில் எதிர்கட்சித் தலைவராகி திமுகவை பின்னுக்குத் தள்ளினார்.

பின்னர் வைகோவின் தவறான வழிகாட்டுதலாலும் முதல்வர் ஆகும் கனவாலும் முழுதாக மண்ணை கவ்வியது தேமுதிக. உடல்நலக்குறைவு வேறு சேர்ந்துகொண்டது. இதிலிருந்து விஜயகாந்தை மீட்டெடுத்து மீண்டும் அரசியல் களத்தில் பயணிக்க வைத்தவர் பிரேமலதா.
விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த பலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை மீண்டும் தயார் செய்தார் பிரேமலதா.

’சில வருஷங்களுக்கு முன்வரை இல்லத்தரசியா இருந்த பிரேமலதாவுக்கு, இப்போ மேடையில் ஆட்சியாளர்களை விமர்சனம் செய்யும் வலிமை எப்படிக் கிடைச்சதுனு! விளையாட்டுக் களத்துல நம்ம கண் முன்னால நிக்கிற போட்டியாளரை ஜெயிச்சே ஆகணும்கிற வெறி மட்டுமே இருக்கும். ஒருவேளை இன்னிக்கு எங்கிட்ட வெளிப்படுற வலிமைக்கும், தைரியத்துக்கும் அடிப்படை, என் விளையாட்டு மைதான அனுபவங்களா இருக்கலாம்’ என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

தம்பி சுதீஷை வலிய முன்னிருத்துவது, பலரை ஒருமையில் பேசுவது, குரலை உயர்த்துவது, தரவுகளை தவறாக பேசுவது போன்ற விமர்சனங்களும் இவர்மீது உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் தைரியம் மிக்க பெண்மணியாக விளங்குபவர் பிரேமலதா என்பதில் சந்தேகம் இல்லை.

எது எப்படி இருந்தாலும் சரி...பிரேமலதா கணவரின் வளர்ச்சிக்கு பக்க பலமாக மட்டும் இருக்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை மாபெரும் சாம்ராஜ்ஜியமாக ஜெயலலிதா எவ்வாறு உருவாக்கினாரோ அதுபோலவே எதிர்காலத்தில் தேமுதிகவை வழிநடத்துவதில் பிரேமலதா முக்கிய பங்கு வகிப்பார், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெண் தலைவராக விளங்குவார் என்கின்றனர் தேமுதிக தொண்டர்கள்.

அடுத்த செய்தி