காங்கிரஸில் எல்லோரும் கஜினி பட ஹீரோ போல தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிடுவதால் பாஜக அமோக வெற்றி பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஓர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தியிருப்பதன் மூலம் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக கூறினார்.
பாகிஸ்தான் பிரச்னை பற்றி பேசும்போது, “2014ஆம் ஆண்டில் நான் பதவியேற்கும் விழாவுக்கு நவாஸ் ஷெரீபை அழைத்தும் பாகிஸ்தானுக்கே சென்று அவரைச் சந்தித்தும் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டிபோதும் பாகிஸ்தான் பகைமையான நடவடிக்கைகளை தொடர்கிறது. அதனை எதிர்கொள்வும் தயாராகவே இருக்கிறேன்.” என மோடி தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் ரஷ்யா மட்டுமே இந்தியாவின் உற்ற நண்பனாக இருந்தது, பிற நாடுகள் பாகிஸ்தானுக்கே ஆதரவாக இருந்துள்ளன எனவும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சீனா மட்டுமே பாகிஸ்தானுடன் இருக்கிறது, உலகின் பிற நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன எனவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சித்த மோடி, கஜினி படத்தின் கதாநாயகனுடன் ஒப்பிட்டு, தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ்காரர்கள் மறந்துவிடுவார்கள் எனச் சாடினார்.
பாகிஸ்தான் பிரச்னை பற்றி பேசும்போது, “2014ஆம் ஆண்டில் நான் பதவியேற்கும் விழாவுக்கு நவாஸ் ஷெரீபை அழைத்தும் பாகிஸ்தானுக்கே சென்று அவரைச் சந்தித்தும் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டிபோதும் பாகிஸ்தான் பகைமையான நடவடிக்கைகளை தொடர்கிறது. அதனை எதிர்கொள்வும் தயாராகவே இருக்கிறேன்.” என மோடி தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் ரஷ்யா மட்டுமே இந்தியாவின் உற்ற நண்பனாக இருந்தது, பிற நாடுகள் பாகிஸ்தானுக்கே ஆதரவாக இருந்துள்ளன எனவும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சீனா மட்டுமே பாகிஸ்தானுடன் இருக்கிறது, உலகின் பிற நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன எனவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சித்த மோடி, கஜினி படத்தின் கதாநாயகனுடன் ஒப்பிட்டு, தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ்காரர்கள் மறந்துவிடுவார்கள் எனச் சாடினார்.