ஆப்நகரம்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதிக்கு வாய்ப்பா?

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

Samayam Tamil 23 Mar 2019, 12:15 pm
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
Samayam Tamil Karthi


வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள், கட்சிகளின் தேர்தல் அறிக்கை எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற கட்சிகள் முன்கூட்டியே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நேற்று இரவு 9 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. ஆனால், சிவகங்கை தொகுதியில் மட்டும் யார் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.

சிவகங்கை தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடவில்லை என்று உறுதியாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவரைத் தான் வேட்பாளராக வேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்பதாலும், சுதர்சன் நாச்சியப்பனும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட விரும்புவதாலும், அந்த தொகுதியில் மட்டும் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், அந்த தொகுதியில் போட்டியிட, கார்த்தி சிதம்பரத்திற்குப் பதிலாக அவரது மனைவி ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி