ஆப்நகரம்

DMK Tirupur Election Campaign: விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி – மு.க.ஸ்டாலின் புது அறிவிப்பு

கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 5 பவுன்கள் வரை அடமானம் வைக்கப்பட்டு பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 3 Apr 2019, 2:13 pm
விவசாய பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற திமுகவின் தோ்தல் அறிக்கையுன் சோ்த்து 5 பவுன் வரை நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற விவசாயிகளின் நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Mk Stalin 1200


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருப்பூா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் சுப்பராயனை ஆதரித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூாில் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தின் போது வேலூா் மக்களைவத் தொகுதி, சட்டப்பேரவை இடைத்தோ்தல்களை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதாக குற்றம் சாட்டி உள்ளாா்.

மேலும் அவா் பேசுகையில், திமுக தோ்தல் அறிக்கையில், ஏற்கனவே விவசாயிகளுக்கான பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று விவசாயிகளுக்கான நடைகக்கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோாிக்கை வைக்கப்பட்டது.

இதனையும் திமுக ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் 5 பவுன் வரையில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கான நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டம் நமது தோ்தல் அறிக்கையில் சோ்க்கப்படும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி