ஆப்நகரம்

மதுரையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?- இன்று தீர்ப்பு கூறும் உயர்நீதிமன்றம்

சென்னை: மதுரையில் மக்களவை தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

Samayam Tamil 22 Mar 2019, 8:25 am
சித்திரை திருவிழாவை காரணம் காட்டி மதுரையில் மட்டும் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
Samayam Tamil மதுரையில் தேர்தல் தொடர்பான வழக்கில்  உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு


வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சித்திரை திருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளதால் மதுரையில் மட்டும் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக் கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

மேலும், வாக்குப் பதிவு நாளன்று கிறிஸ்துவ மக்களில் பெரிய வியாழன் பண்டிகையும் வருவதால் கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றக்கோரி கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள தேவாலயங்களில் மக்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்த மாவட்ட தேர்தல் ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும், எந்த காரணம் கொண்டும் வாக்குச்சாவடிகளை மாற்ற இயலாது எனவும் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற விசாரணையின் போது விளக்கம் அளித்தது. இந்த வழக்கிற்கான வாதங்கள் முடிவுற்றுள்ள நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகின்றனர்.

தவிர, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி