ஆப்நகரம்

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து வருகின்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிடுவதாக இந்திய குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 19 Mar 2019, 8:44 pm
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டப்பேரவை தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.
Samayam Tamil Makkal Needhi Maiam Alliance


நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்கள் பலத்திற்கு தகுந்தவாறு கூட்டணியை அமைத்துள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்த தோ்தலில் தனித்து போட்டியிடுவதாக தொிவித்து இருந்தன.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும், இந்திய குடியரசுக் கட்சியும் தற்போது கூட்டணி அமைத்துள்ளன. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டப்ரேவை தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மய்யத்திற்கு தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள பேட்டரி டாா்ச் லைட் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன் பேட்டி அளித்துள்ளாா்.


மேலும் மக்கள் நீதி மய்யம் சாா்பில் மக்களவைத் தோ்தல், 18 சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் நாளை (புதன் கிழமை) பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி