ஆப்நகரம்

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி - பிரச்சாரத்தில் ஸ்டாலின் வாசித்த முழுக் கவிதை!

மதுரை பிரச்சாரத்தின் போது, நண்பர் ஒருவர் எழுதியதாக கூறி, மு.க.ஸ்டாலின் கவிதை ஒன்றை வாசித்தார்.

Samayam Tamil 28 Mar 2019, 1:57 pm
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் இணைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.
Samayam Tamil Stalin


இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது தமிழக முதலமைச்சர் பழனிசாமி குறித்தும், மோடி குறித்தும் ஸ்டாலின் கவிதை வாசித்தார். அதாவது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதன் சுருக்கமே ஆகும்.

இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி

இது துப்புக்கெட்ட ஆட்சி, அதற்கு தூத்துக்குடியே சாட்சி

இது தரிசாக்கும் ஆட்சி, அதற்கு நெடுவாசலே சாட்சி

இது மனுதர்ம ஆட்சி, அதற்கு நீட் தேர்வே சாட்சி

இது பாலைவன ஆட்சி, அதற்கு மேகதாதுவே சாட்சி

இது ஊழல் ஆட்சி, அதற்கு ரஃபேலே சாட்சி

இது நாணயங்கெட்ட ஆட்சி, அதற்கு செல்லாத நோட்டே சாட்சி

இது கொள்ளைக்கார ஆட்சி, அதற்கு ஜிஎஸ்டியே சாட்சி

இது மதவெறி ஆட்சி, அதற்கு மாட்டுக்கறியே சாட்சி

இது கொலைகார ஆட்சி, அதற்கு கொடநாடே சாட்சி

இது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி.

இது மு.க.ஸ்டாலினுக்கு, அவரது நண்பர் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய கவிதை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக “ஜாடிக்கேற்ற மூடியாகவும், மூடிக்கேற்ற ஜாடியாக மோடியும் எடப்பாடியும் இருப்பதாக” பஞ்ச் லைன் பேசி முடித்துக் கொண்டார்.

அடுத்த செய்தி