ஆப்நகரம்

தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் மகனுக்கு என்ன தகுதி உள்ளது? மு.க. ஸ்டாலின் கேள்வி

தேனி: ஓபிஎஸ் மகன் என்பதை தாண்டி தேர்தலில் போட்டியிட ரவீந்திரநாத்திற்கு என்ன தகுதி உள்ளது? தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 27 Mar 2019, 3:50 pm
தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் என்பதை தாண்டி தேர்தலில் போட்டியிட என்ன தகுதியுள்ளது என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் மகனுக்கு என்ன தகுதி உள்ளது மு.க. ஸ்டாலின் கேள்வி


தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணனையும் ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். எப்போது பேசிய அவர், மறைந்த முன்னார் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை வைத்து அதிமுக அரசியல் செய்து வருகிறது.

திமுக விருப்பப்படி ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், ஓபிஎஸ் மகன் என்பதை தாண்டி அவருக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதியுள்ளது என வினவினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ஓபிஎஸ் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்குமா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பாஜக அதிமுக கூட்டணி உடன்பாடு மூலம், தமிழகத்தின் எந்த உரிமைகள் மீட்கப்பட்டது என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாய பயிர்க் கடன், கல்விக் கடன் ரத்து, நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அவர் அளித்தார். ராகுல் காந்தி பிரமராகும் போது, திமுக அமைச்சரவையில் பங்கெடுத்து தமிழகத்திற்கு பல நன்மைகளை பெற்று தரும்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே ஓபிஎஸ் போட்டியிட பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. அப்படியிருக்கும் போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தேனி தொகுதியின் வேட்பாளராக ரவீந்திரநாத் குமார் அறிவிக்கப்பட்டிருக்க மாட்டார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

அடுத்த செய்தி