ஆப்நகரம்

மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி வாத்ரா குஜராத் தலைநகர் காந்திநகரில் உரையாற்றினார். இவர் முன்னதாக தன் சகோதரர் மற்றும் காங்., தலைவர் ராகுலுடன் காரில் சாலை ஊர்வலத்தில் ஈடுபட்டு பொதுமக்களை கவர்ந்தார். பாட்டி இந்திரா காந்தியில் சாயலில் இருப்பதால் பொதுமக்கள் இவருக்கு அதீத மரியாதை அளித்தனர்.

Samayam Tamil 12 Mar 2019, 6:13 pm
பிரியங்கா காந்தி வாத்ரா குஜராத் தலைநகர் காந்திநகரில் உரையாற்றினார். இவர் முன்னதாக தன் சகோதரர் மற்றும் காங்., தலைவர் ராகுலுடன் காரில் சாலை ஊர்வலத்தில் ஈடுபட்டு பொதுமக்களை கவர்ந்தார். பாட்டி இந்திரா காந்தியில் சாயலில் இருப்பதால் பொதுமக்கள் இவருக்கு அதீத மரியாதை அளித்தனர்.
Samayam Tamil priyanka_gandhi_vadra_1.


காந்திநகர் பிராசார மேடையில் பேசிய பிரியங்கா, காங்., ஆட்சிக்கு வந்தால் குஜராத் இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தரப்பட உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் நலன் உள்ளிட்டவற்றுக்கு காங்., வகுத்துள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.

’உங்கள் வாக்குகள் ஆயுதங்கள் போன்றவை. கேள்வி கேளுங்கள். உங்கள் விழிபுணர்வே நாட்டின் சேவை. இந்த நாடு விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கானது. நீங்கள்தான் இந்நாட்டினை பாதுகாக்க வேண்டும். இன்று நாட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மோடியின் அரசு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. நம் கொள்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெறுப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலை காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் சாத்தியமாகும் என்றார்.

அடுத்த செய்தி