ஆப்நகரம்

மோடி விவேகானந்தரை போன்று இரும்பு மனிதர்- பியூஷ் கோயல் பேட்டி

ராமேஸ்வரம்: ”தமிழகத்தில் பாஜக கூட்டனி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மோடி விவேகானந்தரை போன்று வலிமையான மனிதர்” பியூஷ் கோயல் புகழாரம்

Samayam Tamil 28 Mar 2019, 2:52 pm
தமிழகத்தில் நடைபெறும் மக்கவைத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறும் என்றும், மோடி விவேகானந்தரை போன்று இரும்பு மனிதர் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
Samayam Tamil ராமேஸ்வரத்தில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்த பியூஷ் கோயல்


மத்திய ரயில்வே துறை அமைச்சரும், பாஜக-வின் தமிழக மாநில பொறுப்பாளருமான பியூஷ் கோயல், தனது மனைவியுடன் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலிலிருந்து மண்டப முகாம் வந்திறங்கினார்.

அவரை ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரவேற்று, அதன்பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு காரில் சென்றனர். மேலும் கட்சித் தொண்டர்களும் அவரை வரவேற்றனர்.

அதன் பின் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினியை சுவாமி தரிசனம் செய்த பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் ஒளிமையமான ஆட்சி மோடி தலைமையில் அமையும், அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் குறிப்பாக, தமிழகத்தில் 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறும்.

சிறு வயதுக்கு பின் நான் தற்போது தான் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்துள்ளேன். மோடி விவேகானாந்தரை போன்று இரும்பு மனிதர் என அவர் பியூஷ் கோயல் கூறினார்.

அடுத்த செய்தி