ஆப்நகரம்

வீட்டுப்பாடம் செய்யத் தவறிய பள்ளி மாணவனைப் போல, மோடி பிரச்சாரம்-பிரியங்கா

வீட்டுப்பாடம் (ஹோம்ஒர்க்) செய்யத் தவறிய பள்ளி மாணவனைப் போல, தனது சொந்தத் தோல்விகளை மறைக்க நேரு குடும்பத்தைக் பிரதமர் மோடி குறைகூறுவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 9 May 2019, 4:06 pm
வீட்டுப்பாடம் (ஹோம்ஒர்க்) செய்யத் தவறிய பள்ளி மாணவனைப் போல, தனது சொந்தத் தோல்விகளை மறைக்க நேரு குடும்பத்தைக் பிரதமர் மோடி குறைகூறுவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
Samayam Tamil priyanka


வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீக்சித்தை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். ஒருபோதும் வீட்டுப் பாடங்களை செய்யாத ஒரு பள்ளி மாணவனைப் போல பிரதமர் மோடியின் நிலை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஏன் வீட்டுப் பாடம் செய்யவில்லை என ஆசிரியர் கேட்டால், ஜவஹர்லால் நேரு தன்னுடைய பேப்பரை பிடுங்கிச் சென்று ஒளித்து வைத்துவிட்டார் என்றும், இந்திரா காந்தி அந்த பேப்பரை வைத்து காகிதப் படகு செய்து தண்ணீரில் மூழ்கடித்துவிட்டார் என்றும் மோடி பதில் சொல்வதாக விமர்சித்தார்.

எஞ்சியுள்ள 2 கட்ட தேர்தலில், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெண்கள் பாதுகாப்பை முன்வைத்து மோடி பிரச்சாரம் செய்யத் தயாரா என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி