ஆப்நகரம்

ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் சிக்கியது - மினி லாரியை கைப்பற்றிய பறக்கும் படை!

ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் மினி லாரியில் இருந்து 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Apr 2019, 7:22 pm
சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஏராளமான தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil Tirupati Gold


இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உரிய ஆவணங்கள் அளிக்குமாறு கேட்டனர். ஆனால் அவர்களிடம் ஆவணங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். திருப்பதி தேவஸ்தானதுக்கு கொண்டு செல்லப்படும் நகைகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்கம் இருந்த மினி லாரியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். அதில் தலா 25 கிலோ என்ற அளவில் தனித்தனி மூட்டைகளில் தங்கம் இருந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மினி லாரி கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருப்பதி கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் தங்கமா இல்லை வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொண்டு செல்லப்படுகிறதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி