ஆப்நகரம்

வெவ்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் 200க்கும் மேற்பட்டோர் இணைப்பு

வேலூரில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் திமுக, காங்கிரஸ், அமாமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

Samayam Tamil 28 Jul 2019, 5:16 pm
வேலூர் மக்களவைக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
Samayam Tamil EPS OPS 123


வேலூரில் தனியார் ஓட்டலில் தங்கியுள்ள அதிமுகவின் இணை ஒருங்கிணைபாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக, காங்கிரஸ், அமாமுக ஆகிய கட்சிகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இதில் அமைச்சர்கள் வீரமணி, கருப்பண்ணன், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்டு இன்று சிறப்பான இடத்தில் இருக்கிறது. அம்மாவால் கட்டிகாக்கப்பட்ட இயத்தில் திமுக, காங்கிரசில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள். இது உங்களுடைய இயக்கம். இது மக்களுக்காக துவங்கப்பட்ட இயக்கம். மக்களின் துணையோடு இயக்கத்தை வழிநடத்துகிறோம். அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

இதன் பின்னர் சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது. ஸ்டாலின் மூன்றாண்டு காலமாக ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லிகொண்டே தான் இருக்கிறார். ஸ்டாலின் பொய்யான தகவல்களை தான் கூறுவார். சுற்றுசூழல்துறை மூலம் ராணிப்பேட்டையில் உள்ள குரோமியம் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த துறையின் மூலமாக காற்று மாசை கண்டறிவதற்கு ஆங்காங்கே கருவிகளை வைத்துள்ளோம் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி