ஆப்நகரம்

முலாயம்சிங் பிரதமர் போட்டியில் இருந்து விலகிவிட்டார் - அகிலேஷ்

நாட்டிற்கு புதியவர் ஒருவர் பிரதமராக பதவியேற்க விரும்புவதாகவும், இதற்காக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி பாடுபடும் எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 May 2019, 6:30 pm
நாட்டிற்கு புதியவர் ஒருவர் பிரதமராக பதவியேற்க விரும்புவதாகவும், இதற்காக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி பாடுபடும் எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil akhilesh_yadav_photo_ht_1555422823


உத்தரபிரதேச மாநிலத்தில், இரு துருவங்களாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷின் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம், பிரதமரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், மத்தியில் அடுத்த ஆட்சி அமைவதில் தங்களது கூட்டணியின் பங்கு முதன்மையாக இருக்கும் என அகிலேஷ் தெரிவித்துள்ளார். தனது தந்தை முலாயம் சிங் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றாலும் பிரதமருக்கான போட்டியில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறினார்.

தேர்தல் முடிவுக்கு பின்னரே பிரதமர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அகிலேஷ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி