ஆப்நகரம்

ஜின்னா பிரதமர் ஆகியிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காது!

“ஜின்னா நன்கு படித்தவர். வழக்கறிஞராக பணியாற்றியவர்” என்றும் அவர் புகழ்ந்துள்ளார். தேச பாதுகாப்பு மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு ஆகிய இரண்டையுமே பாஜக தன் தேர்தல் பிரசாரத்தில் பிரதானமாக வைத்திருக்கிறது.

Samayam Tamil 12 May 2019, 12:43 pm

ஹைலைட்ஸ்:

  • பிரதமர் ஆகவேண்டும் என்பதில் நேரு பிடிவாதமாக இருந்தார்.
  • ஜின்னா பிரதமராகியிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil esdfd
முகமது அலி ஜின்னா பிரதமர் பதவிக்கு வந்திருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காது என பாஜக வேட்பாளர் பேசியுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தபோது தான்தான் பிரதமர் ஆகவேண்டும் என்பதில் நேரு பிடிவாதமாக இருந்தார். அவருக்குப் பதில் முகமது அலி ஜின்னா பிரதமராக பதவியேற்றிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காது என மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் தொகுதியின் பாஜக வேட்பாளர் குமன் சிங் தாமோர் தெரிவித்துள்ளார்.

“ஜின்னா நன்கு படித்தவர். வழக்கறிஞராக பணியாற்றியவர்” என்றும் அவர் புகழ்ந்துள்ளார். தேச பாதுகாப்பு மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு ஆகிய இரண்டையுமே பாஜக தன் தேர்தல் பிரசாரத்தில் பிரதானமாக வைத்திருக்கிறது.

இந்நிலையில் பாஜக வேட்பாளரே இவ்வாறு பாகிஸ்தான் தலைவரின் புகழ்பாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி