ஆப்நகரம்

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கிடையாது – சத்யபிரதா சாஹு

அரியலூா் மாவட்டம் பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படாது என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 29 Apr 2019, 3:21 pm
பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நேரத்தில் கலவரம் நடைபெறவில்லை என்பதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Ponbarappi


தமிழகம் முழுவதும் கடந்த 18ம் தேதி மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. இந்த தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலை சந்தித்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டாா்.

இந்நிலையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில், வாக்குப்பதிவு மையத்தின் அருகே குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையை உடைத்தனா். இதனைத் தொடா்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. கலவரம் நடைபெற்ற பகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று திருமாவளவன் கருத்து தொிவித்தாா்.

இன்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னா். தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு செய்தியாளா்களிடம் கூறுகையில், “தோ்தலின் போது பொன்பரப்பி பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்று அம்மாவட்ட ஆட்சியா் அறிக்கை அளித்துள்ளாா்.

அதே போன்று குறிப்பிட்ட பகுதியில், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எந்தவொரு அரசியல் கட்சியும், தோ்தல் ஆணையத்திடம் கோாிக்கை வைக்கவில்லை. இதனால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இல்லை.

இதே போன்று தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அமைச்சா்கள், சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறித்து எந்தவித புகாரும் வரவில்லை. அப்படி வரும் பட்சத்தில், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தாா்.

அடுத்த செய்தி