தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்காக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மதுரை சோழவந்தான் அருகே இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேலும், அதேநாளில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
தேனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இதற்காக மதுரை சோழவந்தால் அருகேவுள்ள பாலமேட்டில் பரப்புரையை அவர் தொடங்கியுள்ளார்.
மகன் ரவீந்திரநாத்துடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை பாலமேட்டில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டார். சாலையில் நடந்து சென்ற அவர், பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.
17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேலும், அதேநாளில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
தேனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இதற்காக மதுரை சோழவந்தால் அருகேவுள்ள பாலமேட்டில் பரப்புரையை அவர் தொடங்கியுள்ளார்.
மகன் ரவீந்திரநாத்துடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை பாலமேட்டில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டார். சாலையில் நடந்து சென்ற அவர், பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.