ஆப்நகரம்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தயாராகும் அலுவலர்கள்- பயிற்சி வகுப்புகள் தீவிரம்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 14 May 2019, 1:06 pm
சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நடைபெற்றும் வரும் இந்த சிறப்பு பயிற்சி முகாமில், தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளின் வாக்கு எணிக்கை பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
Samayam Tamil வாக்கு எண்ணிக்கைக்காக தீவிரமாக தயாராகும் அதிகாரிகள்
வாக்கு எண்ணிக்கைக்காக தீவிரமாக தயாராகும் அதிகாரிகள்


மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற போது, முதன்முறையாக வி.வி.பேட் என்கிற ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதன்படி, வாக்கு எண்ணிக் நடைபெறும் போது ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை எண்ண வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான இந்த பயிற்சிகள் இந்த சிறப்பு முகாமில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பணியில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி, இணை தேர்தல் அலுவலர் ஜேக்கப் மற்றும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கோவிந்தராவ் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதற்காக அம்மா மாளிகையில் அறிமுக நிகழ்வில் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி பேசும் போது, வாக்குகளை எண்ணும் அதிகாரிகள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அடுத்த செய்தி