ஆப்நகரம்

முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்த அதிமுக தொண்டர் மாரடைப்பால் மரணம்

மதுரையில் முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்த அதிமுக தொண்டர் மரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2019, 10:52 pm
மதுரையில் முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்த அதிமுக தொண்டர் மரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil முதல்வர் பரப்புரையை பார்க்க வந்த முதியவர் திடீர் மரணம்
முதல்வர் பரப்புரையை பார்க்க வந்த முதியவர் திடீர் மரணம்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டத்தைச் சேர்ந்தவர் செல்லையா. கடந்த 20 வது ஆண்டுகளுக்குல் மேலாக தீவிர அதிமுக தொண்டரான இவர் இன்று உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்-யை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த முதல்வரின் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.

அப்போது செல்லையா பிரச்சாரம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடன் வந்தவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்

இவருக்கு அழகுப்பிள்ளை என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல்வர் கருணை அடிப்படையில் இறந்த அதிமுக தொண்டரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி