பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்த டப்பாக்களில் மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிப்போம் என வலியுறுத்தும் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்த பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பஞ்சாமிர்தம் தயாரித்து, விற்பனை செய்யும் இந்தப் பஞ்சாமிர்தத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.
இந்த பஞ்சாமிர்த டப்பாக்களை தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளது. விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்த டப்பாக்களில் 100% வாக்களிப்போம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட இது உதவக்கூடும் என பழனி தேர்தல் அதிகாரியும் சார் ஆட்சியருமான அருண்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
17வது மக்களவையைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த பஞ்சாமிர்த டப்பாக்களை தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளது. விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்த டப்பாக்களில் 100% வாக்களிப்போம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட இது உதவக்கூடும் என பழனி தேர்தல் அதிகாரியும் சார் ஆட்சியருமான அருண்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
17வது மக்களவையைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.