ஆப்நகரம்

வாயா வா! பாஜகவிற்கா வாக்கு கேக்குற? இந்த வாங்கிக்கோ; அதிமுகவினருக்கு சோடாபாட்டிலில் செம அடி!

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்து வந்த அதிமுகவினருக்கு செம அடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Apr 2019, 4:02 pm
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, 39 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சியான பாஜக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil ADMK Attack


அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையொட்டி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் மத்திய, மாநில அரசுகள் மீது கொண்டுள்ள கோபத்தை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் அதிமுக கூட்டணியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமைச்சர் மணிகண்டன், எம்பி அன்வர் ராஜா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

அப்போது வாக்கு சேகரிக்க வந்தவர்கள் மீது சோடா பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் உடையத்தேவர் படுகாயம் அடைந்தார். அமைச்சர் முன்னிலையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டது.

உடனே அவர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இதெல்லாம் ”எதிர்க்கட்சிகள் செய்யும் சதி” என்று ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி