ஆப்நகரம்

Madurai Elections 2019: அதிமுகவிற்கு ஓட்டு போடவே இல்ல; அப்ப கொடுத்த பணத்தை தாங்க - தெறித்து ஓடும் மதுரை மக்கள்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து, கொடுத்த பணத்தை திரும்ப வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 27 May 2019, 8:27 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil Money


மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தோல்வி அடைந்தார்.

முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் வெற்றி பெற ஒரு குழு அமைத்துள்ளனர். இவர்களிடம் 6 சட்டமன்ற தொகுதிகளில் 80% வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டிற்கு ரூ.300 என்ற விகிதத்தில் கொடுக்க பணம் அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த குழுவினர் ஒரு சிலருக்கு மட்டும் தான் பணம் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக போதிய வாக்கு சதவீதம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த தொகுதியில் பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் ராஜன் செல்லப்பா விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் வாக்குச்சாவடி வாரியாக சென்று, எந்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். அவர்கள் அனைவரும் ஓட்டு போட்டனரா என்று கணக்கெடுத்து வருகின்றனர்.

இதையடுத்து பணம் வாங்கிக் கொண்டு, ஓட்டுப் போடாதவர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கின்றனர். எங்கள் வேட்பாளருக்கு கணக்கு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனால் பணத்தை வாங்கிய பொதுமக்களும், அதிமுகவினரிடம் இருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர்.

அடுத்த செய்தி