ஆப்நகரம்

வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அட்டை: பிரதமர்

மக்களவை தேர்தலில் 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது தாயிடம் ஆசி பெற்றார்.

Samayam Tamil 23 Apr 2019, 10:14 am
வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அட்டை: பிரதமர் மோடி
Samayam Tamil modi

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்த பின் பிரதமர் மோடி பேட்டி
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது தாயிடம் ஆசி பெற்றார்.

தாயிடம் ஆசி பெற்ற பிரதமர் அகமதாபாத்தில் வாக்களித்தார்


மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக குஜராத் காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடி, அவரிடம் ஆசி பெற்றார். அப்போது வீட்டின் முன் கூடியிருந்த மக்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

அடுத்த செய்தி