ஆப்நகரம்

PM Modi: நானும் நாட்டின் காவலன்!... புதிய யுத்தியை வகித்து தேர்தலை அணுகும் மோடி

மக்களவை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் ‘மெய்ன் பி செளகிதர்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி முன் எடுத்துள்ளார்.

Samayam Tamil 16 Mar 2019, 1:34 pm
மக்களவை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் ‘மெய்ன் பி செளகிதர்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி முன் எடுத்துள்ளார்.
Samayam Tamil pm modi


மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைப் பெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தொகுதி பங்கீடு முடித்து, தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நானும் காவலன் பிரச்சாரம்:
இந்நிலையில் பாஜக சார்பில் நானும் நாட்டின் காவலன் என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று (மார்ச் 16) தொடங்கி வைத்துள்ளார். அவரின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார்.

அவரது டுவிட்டில், “நான் மட்டும் நாட்டின் சேவகன், காவலன் அல்ல, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாட்டிற்கு செய்யும் சேவையால் காவலன் தான். யாரெல்லாம் ஊழல், லஞ்சத்தை எதிர்த்து போரடுகிறாரோ, சமூக அவலங்களை எதிர்க்கின்றனரோ அவர்கள் அனைவரும் நாட்டின் காவலாளி தான். அனைவரும் நானும் ஒரு காவலாளி என உறுதி ஏற்க வேண்டும்.” என கேட்டுக் கொண்டுள்ளார்.


பாஜகவின் இந்த பிரச்சாரத்திற்கு, காங்கிரஸ், “காவல்கார திருடன்” என விமர்சித்துள்ளனர்.

அடுத்த செய்தி