ஆப்நகரம்

உண்ணா நோன்பு இருந்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி

நவராத்திரிக்கான உண்ணா நோன்பு இருந்து, பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களிலும் நடக்கும் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

Samayam Tamil 13 Apr 2019, 9:02 pm
வடமாநிலங்களில் பிரசித்திப் பெற்ற வசந்த நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி உண்ணா நோன்பு இருந்து வரும் நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைக்காக அவர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil விரதமிருக்கும் பிரதமர் மோடி- ஏன் தெரியுமா..??
விரதமிருக்கும் பிரதமர் மோடி- ஏன் தெரியுமா..??


மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ம் தேதி நடைபெற்றது. மேலும், ஏப்ரல் 18,23,29, மே 6,12,19 ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலோடு சேர்த்து அன்றே காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக பல்வேறு மாநிலங்களில் 91 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதோடு ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) சார்பில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஏப்ரல் 6 ம் தேதி முதல் இதுவரை 13 மாநிலங்களில் 23 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மோடி உரையாற்றியுள்ளார். வட மாநிலங்களில் பிரசித்திபெற்ற வசந்த நவராத்திரி இம்மாதம் 6ம் தேதி முதல் நாளை வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த 9 நாட்களும் விரதம் கடைபிடிப்பவர்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருப்பர். அந்த வகையில் பிரதமர் மோடியும் ஒவ்வொரு ஆண்டும் உண்ணா நோன்பு இருந்து வருகிறார்.

இந்த நாட்களில் அவர் உணவு எதுவும் சாப்பிடுவது கிடையாது. இருந்த போதிலும் அவர் எந்தவித அரசியல் கூட்டங்களையும், பணிகளையும் தவறவிடவில்லை. இடைவிடாமல் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தான் விரதம் இருப்பது குறித்தும் அவர் வெளியில் பேசவில்லை என்பது கூடுதல் தகவல்.

பிரதமர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கும் போது, இடைவெளி எடுத்து இரண்டு மூன்று நாட்கள் ஓய்வுக்கு பிறகு பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள். ஆனால் மோடி, பல்வேறு மாநிலங்களுக்கு தொடர்ந்து பயணித்து தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் என்கிறார்கள் பாஜக-வினர்

அடுத்த செய்தி