நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசுக்கு சொந்தமான இணையதளங்களிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர்களின் படங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 17வது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி நாட்டில் ஏப்ரல் 11 முதல் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படவுள்ளன.
இதனால் நாட்டில் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக சுனில் அரோரா மேலும் தெரிவித்தார். அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், மத்திய மற்றும் மாநில அரசுகளில் அதிகாரத்தில் இருப்பவர்களின் புகைப்படங்கள் இணையம் உள்ளிட்ட அரசு திட்டங்களில் இடம்பெறக்கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.
இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் பாஜக ஆட்சி செலுத்தும் மாநிலங்களின் அரசு இணையத்தளங்களிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், மத்திய அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் புகைப்படங்களும் அகற்றப்பட்டுள்ளன. தவிர, மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மாநில அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மூன்று நாட்களில் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 17வது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி நாட்டில் ஏப்ரல் 11 முதல் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படவுள்ளன.
இதனால் நாட்டில் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக சுனில் அரோரா மேலும் தெரிவித்தார். அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், மத்திய மற்றும் மாநில அரசுகளில் அதிகாரத்தில் இருப்பவர்களின் புகைப்படங்கள் இணையம் உள்ளிட்ட அரசு திட்டங்களில் இடம்பெறக்கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.
இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் பாஜக ஆட்சி செலுத்தும் மாநிலங்களின் அரசு இணையத்தளங்களிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், மத்திய அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் புகைப்படங்களும் அகற்றப்பட்டுள்ளன. தவிர, மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மாநில அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மூன்று நாட்களில் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.