ஆப்நகரம்

நாளை அனல் பறக்கும் பிரச்சாரம் காத்திருக்கு; மதுரை வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி!

மதுரையில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் வந்து சேர்ந்தார்.

Samayam Tamil 12 Apr 2019, 10:24 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
Samayam Tamil Modi in Kovai


இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் எப்படியாவது வெற்றியை ருசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், தொடர்ந்து தமிழகம் நோக்கி பிரதமர் மோடி படையெடுத்து கொண்டிருக்கிறார். நாளை மதுரை மற்றும் தேனியில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இதற்காக தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மோடி தங்கினார்.

பிரதமரின் வருகையை ஒட்டி, மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 6 மணியளவில் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு வந்தடைந்தார்.

அங்குள்ள கடற்படை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அடுத்த செய்தி