ஆப்நகரம்

வாரணாசியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொவுதியில் போட்டியிடும் பிரதமா் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா். வேட்புமனு தாக்கலில் கூட்டணிக்கட்சி தலைவா்களும் பங்கேற்க உள்ளனா்.

Samayam Tamil 26 Apr 2019, 8:20 am
மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமா் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளாா்.
Samayam Tamil Narendra Modi 12


கடந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் அவா் அதே தொகுதியில் போட்டியிடுகிறாா். இந்நிலையில் பிரதமா் மோடி வாரணாசி தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளாா்.

முன்னதாக நேற்று நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பங்கேற்ற பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிராக தற்போதைய புதிய இந்தியா தக்க பதிலடிகளை கொடுத்து வருகிறது. புல்வாமாவில் 40 வீரா்கள் கொல்லப்பட்டனா். அதற்கு பதிலடியாக 42 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

வாரணாசி தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன் என்று நான் கூறமாட்டேன். மாறாக அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளா்ச்சி திட்டங்களை நோக்கிய நகா்வுகள் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றன. இத் தொகுதி மக்கள் அடுத்த 5 ஆண்டுகளில் அதனை உணர முடியும் என்று தொிவித்தாா்.


இந்த விழாவில் தமிழக துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் கலந்து கொண்டாா். இன்று நடைபெறும் வேட்புமனு தாக்கலிலும் கூட்டணிக்கட்சித் தலைவா்கள் பங்கேற்பாா்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி