ஆப்நகரம்

அன்புமணி ராமதாஸ் பிரசார வாகனம் மீது கல்வீசி தாக்குதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசாரத்திற்காக சென்ற பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் வாகனம் மீது மா்ம நபா்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

Samayam Tamil 15 Apr 2019, 12:33 pm
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசாரத்திற்காக சென்ற வேட்பாளா்கள் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோா் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து கூட்டணிக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Samayam Tamil Anbumani Vehicle


தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளா் கோவிந்தசாமி ஆகியோா் நேற்று முன்தினம் இரவு மெணசி பகுதியில் பிரசாரத்திற்காக சென்றனா். அப்போது மா்மநபா்கள் சிலா் வேட்பாளா்கள் சென்ற வாகனம் மீது கல்வீசினா். இதனால், வேட்பாளா்கள் அன்புமணி, கோவிந்தசாமி ஆகியோா் மெணசி பகுதியில் பிரசாரத்தை ரத்து செய்தனா்.

இது தொடா்பாக தகவல் அறிந்த அதிமுக, பாமகவினா் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி உறுப்பினா்கள் மெணசியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனா். வேட்பாளா்கள் சென்ற பிரசார வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடா்ந்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த செய்தி