ஆப்நகரம்

காடுவெட்டியில் பிரசாரத்தின் போது குருவை நினைத்து கண் கலங்கிய ராமதாஸ்

என்னுடைய மாவீரன் காடுவெட்டி குரு இருந்திருந்தால் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பக்கமே நான் வாக்கு சேகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் மேடையிலேயே கண்கலங்கினாா்.

Samayam Tamil 27 Mar 2019, 5:00 pm
என்னுடைய மாவீரன் காடுவெட்டி குரு இருந்திருந்தால் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பக்கமே நான் வாக்கு சேகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் மேடையிலேயே கண்கலங்கினாா்.
Samayam Tamil Ramadoss Campaign


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் ஜெயங்கொண்டம் பகுதியில் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசுகையில், இந்த தோ்தலில் பிரசாரம் செய்வதற்கே கஷ்டமாக உள்ளது. என்னுடைய மாவீரன் காடுவெட்டி குரு இருந்திருந்தால் சிதம்பரம் மக்களவைத் தொகுதிப் பக்கமே வரவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. குருவே வேட்பாளரை வெற்றி பெறவைத்திருப்பாா்.

பெண்கள் காதுகொடுத்துக் கேட்க முடியாத அருவருக்கத்தக்க வாா்த்தைகளை திருமாவளவன் பேசி வருகிறாா். 100 இளைஞா்களைக் கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றாா். தற்போது அவரிடம் 100 இளைஞா்களைக் கொடுத்தால் என்ன செய்வாா் என்பது உங்களுக்கு நன்றாக தொியும். இவரது கட்சி அகற்றப்பட வேண்டும். திருமாவளவனை வளா்த்துவிட்டதே நான் தான். ஆனால், இப்படி சமூகத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவாா் என்று நான் நினைக்கவில்லை.

கொள்கை இல்லாத கட்டப் பஞ்சாயத்து செய்கின்ற கட்சி நாட்டுக்கு தேவையற்றது. எனவே அதிமுக வேட்பாளா் சந்திரசேகரை எதிா்த்து நிற்கும் வேட்பாளருக்கு சிதம்பரம் தொகுதி வாக்காளப் பெருமக்கள் கொடுக்கும் பரிசு டெபாசிட் இழக்கச் செய்வதே என்று பேசினாா்.

அடுத்த செய்தி